Pages

Tuesday, March 21, 2017

பூமியை போல புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 3 கோள்

 வாஷிங்டன்: பூமியிலிருந்து 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் பூமி போன்ற புதிய கிரகங்களை நாசா கண்டறிந்துள்ளது. இந்த 7 புதிய கிரகங்களில் மூன்றில், மனிதர்கள் வசிக்க்க கூடிய சூழல் உள்ளது என நாசா அறிவித்துள்ளது புருவத்தை உயர்த்தியுள்ளது.
 
நீர் ஆதாரம், காற்று என பூமியின் சூழல் அந்த மூன்று கோள்களில் உள்ளனவாம். அங்குள்ளதாக நாசா கூறுகிறது. இந்தப் புதிய கிரகங்கள் அளவிலும் கிட்டத்தட்ட பூமியை ஒத்து உள்ளன அல்லது அதை விட சற்று சிறிதாக உள்ளன. 
 
 
இதுவரை மனிதர்கள் கண்டுபிடித்த கிரகங்களிலேயே இதுதான் சிறந்த கண்டுபிடிப்பு என்றும் நாசா வர்ணித்துளளது. காரணம் இந்த கிரகங்கள் கிட்டத்தட்ட பூமி போலவே உள்ளது.

சூரிய மண்டலம்

இந்த புதிய கிரகங்கள் டிராப்பிஸ்ட் 1 என்ற நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன. இதுதான் இந்த கோள்களின் சூரியன் எனவும் பொருள் கொள்ளலாம்

எவ்வளவு நாள் ஆகும்

தற்போதுள்ள எந்த டெக்னாலஜியும், புதிய கோள் கூட்டங்களை சென்று சேரும் திறன்மிக்கவை கிடையாது. எனவேதான், விண்வெளி ஆய்வுக்கான டெலஸ்கோப்புகளை பயன்படுத்தி தொலைவிலிருந்தபடியே ஆய்வுகளை நடத்தி வருகிறோம்.

ஈர்ப்பு விசை எப்படி உள்ளது

ஈர்ப்பு விசை பற்றி அறிய வேண்டுமானால், அக்கோள்களின் நிறை மற்றும் ரேடியஸ் ஆகியவை குறித்து அறிய வேண்டும். இப்போது கிடைத்துள்ள தரவுகள் அடிப்படையில் பார்த்தால், இம்மூன்று கோள்களின் ஈர்ப்பு விசை, பூமியை ஒத்துப்போகிறது. இதில் கோள் எப்-க்கு மட்டும் விதி விலக்கு. ஏனெனில் இந்த கோள் பூமியை விட சுமார் 68 சதவீதம் ஈர்ப்பு விசை குறைந்ததாக தெரிகிறது.

உயிரினங்கள் உள்ளதா

இந்த கோள்களில் கடல், கண்டங்கள், பயிர்கள் போன்றவை உள்ளனவா என்பதை கண்டறிய நவீன டெலஸ்கோப்புகள் தேவை. அடுத்த வருடம் புதிதாக ஒரு டெலஸ்கோப்பை அறிமுகம் செய்ய உள்ளோம். அதைவிடவும் நவீன டெலஸ்கோப்புகளால் மட்டுமே இக்கோள்களில் உள்ள அம்சங்கள் பற்றி துல்லியமாக தெரிந்துகொள்ள முடியும். பிற நட்சத்திர கூட்டங்களில் இருந்து வெளிவரும் வெளிச்சத்தை அடக்கி, இக்கோள்களை பார்க்கும் வகையிலான அதி நவீன டெலஸ்கோப்புகள் அவசிய தேவையாகும். அதற்கு கால நேரம் தேவைப்படும்.(http://tamil.oneindia.com/news/international/nasa-s-epic-7-planet-discovery-an-explainer/slider-pf223059-274964.html)

Friday, March 17, 2017

நிலவுக்கு அடுத்த ஆண்டு சுற்றுலா


கலிபோர்னியா: விண்வெளி ஆய்வில் தொடர்பில்லாத சாதாரண சுற்றுலா பயணிகளை நிலவுக்கு அனுப்பி வைக்க அமெரிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியா மாகானம் ஹாதோர்ன் நகரில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி சுற்றுலா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிலவுக்கு சுற்றுலா செல்ல 2 பேரை தேர்வு செய்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. அவர்கள் யார் அதற்கான கட்டணம் எவ்வளவு என்பதை தெரிவிக்கப்படாதது சுவாரஸியத்தை ஏற்படுத்தியுள்ளது.(http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=283414)




நாசாவின் வழிகாட்டுதலுடன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திலிருந்து சுற்றுலா ராக்கெட் ஏவப்பட்டு விண்வெளியை அடையும். பின்னர் அதிலிருந்து பிரிந்து நிலவுக்கு செல்லும் விண்வெளி ஓடத்தில் இருந்தபடியே சுற்றி பார்க்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் உள்ள நிலவு சுற்றுலா திட்டம் அடுத்த ஆண்டின் இறுதியில் தான் செயல்படுத்தப்படும் என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அண்டம்

அண்டம் (UNIVERSE)
அண்டத்தின் நிகழ்வுகள்: (THE UNIVERSE ACTIONS)
 எல்லையில்லாப்பிரபஞ்சத்தில் பலப்பொருட்கள் பலவருடங்களாக ஓய்வுநிலையில் இருந்தன. மேலும் அந்த அந்த பொருட்கள் தனக்கே உரிய ஈர்ப்புவிசையை பெற்று காணப்பட்டன.
மேலும் அந்த ஈர்ப்பு விசையினால் பலப்பொருட்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கவும் விலக்கவும் ஆரம்பித்தது. மேலும் இந்நிகழ்வில் பல பெரியப்பொருட்களை நோக்கி (அதாவது அதிக ஈர்ப்பு விசைக்கொண்ட பொருட்களை நோக்கி) பலசிறிய பொருட்கள் ஈர்க்கப்பட்டன.
இந்த நிகழ்வின் போது பல்வேறு சிறியபொருட்கள் பல்வேறு பெரியப்பொருட்களை தாக்கின. இதனால் அந்த அந்த பெரியப்பொருட்கள் நகர ஆரம்பித்தன.
மேலும் இந்த நிகழ்வின் போது ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்ட மற்றும் விலக்கப்பட்ட பல்வேறு சிறிய மற்றும் பெரியப்பொருட்களும் பிரபஞ்சவெளியில் நகர ஆரம்பித்தன.
இவ்வாறு பிரபஞ்சவெளியில் நகர ஆரம்பித்த பலப்பொருட்களில் படிப்படியாக சுழல்மின்னோட்டங்கள் தோன்றின.
மேலும் அப்பொருட்களின் வேகம் மற்றும் சுழல் மின்னோட்டங்களால் அப்பொருட்களின் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்துக்கொண்டே சென்றன. இதனால் அப்பொருட்கள் படிப்படியாக உருகியன.
இவ்வாறு அப்பொருட்கள் உருகிக்கொண்டே பிரபஞ்சவெளியில் தனது உருகிய மற்றும் உடைந்தப் பகுதிகளை சிதரடித்து கொண்டே நகர்ந்தன.
மேலும் இவ்வாறு சிதரடிக்கப்பட்ட பொருட்களில் சுழல்மின்னோட்டங்கள் பரவி காணப்பட்டன.
மேலும் சுழல்மின்னோட்டங்களினால் வெப்பமானப்பொருட்களில் இருந்து அனல், தூசு, புகை, வாயு மற்றும் அந்த பொருட்களின் பகுதிகள் போன்றவை வெளியேறியன.
இவ்வாறு வெளியேறிய பொருட்களை அதிக ஈர்ப்புவிசைக்கொண்ட பொருட்களும் மற்றும் அதனறிகில் உள்ள பொருட்களும் தன்னை நோக்கி ஈர்த்துக்கொண்டன. இதனால் அப்பொருட்களைச் சுற்றி வாயுமண்டலங்கள், துணைக்கோள்கள் மற்றும் பலப்பொருட்கள் ஏற்பட்டன.
மேலும் இவ்வாறு அதிக ஈர்ப்புவிசைக்கொண்ட பொருட்களாலும் மற்றும் அதனருகில் உள்ள பொருட்களாலும்; ஈர்க்கப்படாத பலபொருட்கள் பிரபஞ்சவெளியில் நகராமல் உள்ளன.
மேலும் இவ்வாறு மாற்றம் அடைந்த பொருட்கள் பிரபஞ்சவெளியில் திண்மமாகவும், நீர்மமாகவும், வாயுவாகவும், பிளாஸ்மாவாகவும் மற்றும் பல்வேறு பொருட்களாகவும் மாறியன.
இவ்வாறு மாற்றம் அடைந்த பொருட்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுக்கள் ஒருசில கோள்களில் (பொருட்களில்) ஏற்பட்டு அந்த பொருட்களில் உயிரினங்கள் தோன்றின.
மேலும் அண்டம் என்பது ஒரு பொருள் ஆகும். இந்த பொருள் தோற்றத்திற்கான காரணம் ஆற்றல் ஆகும். ஆற்றல் தோற்றத்திற்கான காரணம் பொருள் ஆகும். எனவே பொருளாற்றல் தோற்றத்திற்கான காரணம் அதாவது அண்டம் எப்படி செயல்படுகிறது எனில்,
‘தோன்றாப்பொருளின் தோற்றத்தின் தோற்றமாகவும் முடியாப் பொருளின் முடிவின் முடிவிலியாகவும்’
அதாவது,
‘தோன்றாப்பொருளின் உருவத்தின் உருவமாகவும் அழியாப்பொருளின் அழிவின் அழிவிலியாகவும்’
அண்டம் செயல்படுகிறது. எனவே அண்டமானது ”ஆற்றல் அழிவின்மை விதிப்படி’ தனது தோற்றத்தில் இருந்து ‘காலத்தை’ பொறுத்து தொடர்ந்து மாற்றம் அடைந்துக்கொண்டே இருக்கின்றன.
இந்த கொள்கையின்படி:
1. அண்டத்தில் உள்ள பொருட்களின் இயக்கத்திற்கு அடிப்படை காரணம் ஈர்ப்புவிசை.
2. அண்டத்தில் உள்ள பொருட்களின் இயக்கத்தின் காரணமாக பல அண்டப்பொருட்களில் சுழல்மின்னோட்டங்கள் தோன்றின.
3. இந்த சுழல்மின்னோட்டத்தின் காரணமாக அண்டத்தில் காணப்படும் பலப்பொருட்களில் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து அப்பொருட்கள்(NABULA)ஒண்மீன் படலமாக மாற்றம்அடைந்துக்கொண்டே இருக்கின்றன.
4. மேலும் புவி, மற்ற கோள்கள் மற்றும் அண்டத்தில் காணப்படும் பலப்பொருட்கள் (NABULA) ஒண்மீன் படலாமாக மாறும்.
5. இதனால் வருங்காலங்களில் உயிரினங்கள் வாழ புவி மற்றும் அண்டத்தில் காணப்படும் பலப்பொருட்கள் தகுதி அற்றதாக மாறி வெறும் வெப்ப விண்மீனாக காட்சித்தரும்.
6. மேலும் புவியில் ஏற்படும் இயற்கை சீற்றங்களுக்கு அடிப்படை காரணமாக அமைகிறது.
7. எனவே தற்போது மக்கள் வளங்களை அறிவியல் பாதையில் செலுத்தி வருங்காலங்களில் வேற்றுக்கிரகங்களுக்கு செல்வதற்கான ஆயத்தபணிகளை மேற்கொள்ளலாம்.
8. மேலும் தற்போதிய கண்டுபிடிப்பின்படி, வேற்று கிரகங்களில் உயிரினங்கள் இல்லை மற்றும் வேற்றுக்கிரகத்தில் புவியில் உள்ள உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்திய கூறும் அவ்வளவாக இல்லை. எனவே வேற்றுக்கிரகங்களில் உள்ள சூழ்நிலையை செயற்கை முறையில் புவியில் உள்ள ஆய்வகங்களில் உருவாக்கி அந்த சூழ்நிலையில் புவியில் உள்ள உயிரினங்களை தோற்றிவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
9. மேலும் இம்முறையில் அண்டத்தில் உள்ள பலப்பொருட்களில் (கோள்கள், துணைக்கோள்கள்…) போன்றவற்றில் புவியில் உள்ள உயிரினங்களை தோற்றிவிக்கலாம்.
10. மேலும் இந்த அண்டத்தின் நிகழ்வுகள் அணுக்களிலும், மூலக் கூறுகளிலும் காணப்படுகின்றன.
கறுப்புக்கண்:
வாயஜேர் -2 விண்கலம் நெப்டியூனைப் (Neptune) படம் பிடித்து அனுப்பியதை வைத்துப்பார்த்ததில் வியாழன் (Jupiter) கோளில் சிவப்புக்கண் இருப்பது போலவே நெப்டியூனில் கருப்புக்கண் ஒன்று இருக்கிறது என்னும் விவரத்தைத் தெரிந்து கொண்டார்கள். நெப்டியூனின் தென்பகுதியில் உள்ள இந்த ‘கறுப்பு புள்ளி’ அங்கு வீசும் அதிவேகக்காற்று காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
இந்த கறுப்புபுள்ளியின் உயரே வெண்ணிற மேகங்கள் இருப்பது போலவும் அந்தப்புகைப்படங்களில் காணப்பட்டது. ஏதோவொரு எரிசக்தி அந்தக்கோளில் இருப்பதையே அந்த வெண்ணிற மேகங்கள் காட்டுகின்றன என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தார்கள்.
மேலும் இந்த கறுப்புக்கண் போல் புவியில் (Annular) வளைய உருவம் என்ற பகுதி காணப்படுகிறது. இவ்வாறு காணப்படும் கறுப்புக்கண்கள் போன்ற தோற்றங்கள் (Annular) நெபுலாவின் நியூகிளியஸ் போல் உள்ளது.
எனவே புவி, நெப்டியூன், வியாழன் மற்றும் அண்டத்தில் காணப்படும் பல பொருட்கள் நெபுலா (nn) போல மாற வாய்ப்பு உள்ளது.
நெப்டியூன்:
ஆயிரத்தில் ஒரு பங்கு:
நாம் வாழும் பூமிக்குச் சூரியனிடமிருந்தேதான் ஒளிகிட்டுகிறது என்பது தெரிந்ததே. ஆனால் சூரியனிடமிருந்து பூமிக்கு எவ்வளவு ஒளிகிட்டுகிறதோ அதில் 1000-தில் ஒரு பங்குதான் நெப்டியூன் கோளுக்குகிட்டுகிறது.
ஆனால் நெப்டியூனில் காணப்படும் வெப்பநிலை 300 ஆகும். இந்த அதிகமான வெப்பத்திற்கு காரணம் நெப்டியூனின் சுழற்சிவேகம் ஆகும்.
இந்த கொள்கையை விளக்க போதுமான சான்றுகள்:
1. அண்டத்தில் காணப்படும் அனைத்து பொருட்களிலும் மின்காந்தக்கதிர்வீச்சு காணப்படுகிறது.
2. அண்டத்தில் காணப்படும் பலப்பொருட்கள் காந்தத்தன்மை பெற்றுள்ளன.
சுழல்மின்னோட்டம்:
EDDY CURRENT (or) FOUCAULT CURRENT:
காந்தம் தன்னைத்தானே சுற்றிவரும்போது உலோகப்பெட்டி போன்ற உள்ளகத்தில் சுழல்மின்னோட்டம் ஏற்படுகிறது.
ஃபிளமிங் வலக்கை விதி:
(FLEMING’S RIGHT HAND RULE)
ஃபிளமிங் வலக்கை விதிப்படி, காந்தப்புலத்தின் திசைக்கு செங்குத்து திசையில் சுழல்மின்னோட்டங்கள் பாய்வதால், அம்மின்னோட்டங்கள் உள்ளகத்தின் அச்சை மையமாகக்கொண்ட வட்டப்பாதையில் அமைகிறது.
இந்த ஃபிளமிங் வலக்கை விதிப்படி, பிரபஞ்சத்தில் உள்ள பலப்பொருட்கள் தங்கள் மைய அச்சை மையமாக்கொண்டு வட்டப்பாதையிலோ அல்லது நீள்வட்டப்பாதையிலோ சுற்றிவருகின்றன. மேலும் பெரியப்பொருட்களின் ஈர்ப்புவிசையால் அவற்றை நீள்வட்டப்பாதையில் சுற்றிவருகின்றன.
தூண்டல் உலை: (Induction Furnace)
ஒரு உலோகத்திடப்பொருளில் உண்டாகும் மிக அதிக அளவிலான சுழல்மின்னோட்டங்களால் எந்த ஒரு உலோகமும் உருகிவிடும் அளவுக்கு அதிக வெப்பம் உண்டாகும்.
‘சுழல்மின்னோட்ட விளைவை முழுமையாக நீக்க முடியாது’.
பூமி:
உள்மையப்பகுதி:
உள்மையப்பகுதியானது 2560 கிலோமீட்டர் ஆழம் கொண்டது. இந்தப்பகுதியில் இரும்பு, நிக்கல், உருகியபாறை போன்றவை கலந்த குழம்பு காணப்படுகிறது.
உள்மையப்பகுதியில் என்ன நடக்கிறது என்பது இன்னமும் முழுமையாக ஆராய்பபடவில்லை. எனினும் பூமியின் மேற்புறத்தில் ஏற்படும் சில மாற்றங்களுக்கு உள்மையப் பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளே காரணம் என்று விஞ்ஞானிகள் உறுதியாக நம்புகிறார்கள்.
மாண்டில் பகுதிக்கும் உள்மையப்பகுதிக்கும் இடையில் உள்ள பகுதியில் மின்காந்தச் சுழல்களும் மின்காந்தக் கொந்தளிப்புகளும் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
அதன் காரணமாகவே பூமிக்கு மேற்புறத்தில் கண்டங்கள் இடம் பெயருகின்றன என்றும், துருவங்கள் மாறுகின்றன என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
பூமிக்குள்ளும் மழை:
பூமிக்கு வெளியே மழை பெய்கிறது அல்லவா? அதேபோல் பூமிக்குள்ளும் மழை பெய்கிறது! இதை நம்புவது சிரமமாக இருக்கிறது அல்லவா? ஆனால் அது உண்மை.
பூமிக்குள்ளே உட்புற மையப்பகுதியில் உண்டாகும் அபரிதமிதமான வெப்பத்தால் மாண்டில் பகுதியிலுள்ள பாறைகள் உருகி உட்பு மையப்பகுதியை நோக்கிச் செல்கிறது. அது ‘இரும்பு மழை’ என்று நம்முடைய விஞ்ஞானிகளால் குறிப்பிடப்படுகிறது.
பூமிக்குக் காந்தசக்தி ஏற்படுவதற்கு இந்த இரும்பு மழையே காரணம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
நிலநடுக்கம்:
பூமிக்குள்ளே உள்மையப் பகுதி முழுவம் இரும்புக் குழம்பாக இருக்கிறது என்பது ஏற்கெனவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது 5500 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் இருக்கிறது. அப்பகுதியில் ஒரு வகையான அலைகள் வீசிக்கொண்டிருக்கின்றன. அவை பூகம்ப அலைக்கதிர்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. (http://edu.tamilclone.com/?p=5855)
புவி காந்தப்புலத்திற்கு (Earth Magnetic Field) என்ன காரணம்?
அது இன்னும் யாருக்கும் நிச்சயமாகத் தெரியவில்லை. வால்ட்டர் மாரிஸ் எல்சாசர் (Walter Maurice Elsasser) என்கினற விஞ்ஞானி கூறியிருக்கிற விளக்கத்திற்குப்பரவலாக ஆதரவு இக்கிறது. பூமியின் மையத்தில் இரும்பு உருகித்திரவ நிலையிலுள்ளது.
பூமி சுலும்போது இரும்புத்திரவத்தின் சுழல்கள் தோன்றி மேற்கிலிருந்து கிழக்காக சுற்றுகின்றன. இவற்றின் காரணமாக மேற்கிலிருந்து கிழக்காக வட்டமிடும் ஒரு மின்னோட்டம் தோன்றுகிறது. இந்த மின்னோட்டம் பூமியின் அச்சுக்கோட்டில் வடக்குத்தெற்காக ஒரு காந்தப்புலத்தை உண்டாக்குகிறது. இதனால் பூமியின் அச்சுப்பகுதி ஒரு காந்தமாகிவிடுகிறது. இந்தக்காந்தம் பூமியைச் சுற்றிப்பரவியுள்ள காந்தப்புலத்தை உண்டாக்குகிறது என்று அவர் சொல்லுகிறார்.
பூமியின் உட்பகுதியில், 100 கிலோ மீட்டர் ஆழம் வரை சென்றால், அங்கு வெப்பநிலை 1,200 கெல்வின் ஆகும். 1000 கிலோமீட்டர் ஆழத்தில், வெப்பநிலை 3,000 கெல்வினாக உயர்கிறது. புவியின் மையப் பகுதியின் வெப்பநிலை, 6,400 கெல்வின். சூரியனின் மேற்பரப்பு வெப்பம், 6,000 கெல்வின்தான், புவியின் மையப் பகுதியின் வெப்பம், அதைவிட 400 கெல்வின் அதிகம் என்பது குறிப்பிடத் தகுந்தது.

சூரிய வளிமண்டல புயல்கள்

பூமியின் காந்த பாதுகாப்பு வலயத்தில் ஏற்பட்ட கசிவிற்கு பிறகு நடந்த நிகழ்வின் பதிவை இந்திய மற்றும் ஜப்பானிய விஞ்ஞானிகள் கொண்ட குழு ஒன்று சேர்ந்த சர்வதேச படைப்பாக வழங்கினர்
உதகையில் உள்ள காஸ்மிக் கதிர் ஆய்வகத்தில் உள்ள உலகில் மிகப்பெரியதாக கருதப்படும் கிரேப்ஸ்-3 முயான் தொலைநோக்கியை கொண்டு
22 ஜூன் 2015 ஆம் தேதி இரண்டு மணி நேரத்திற்கு வளிமண்டலத்தை படையெடுத்த அண்டக் கதிர்களை விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர்,
சூரியனிலிருந்து உருவாகும் மின்னூட்ட துகள்கள் பூமியை அதிக வேகத்தில் உரசுவதன் காரணமாக இந்த காந்தக லன் கசிவு ஏற்படுகிறது.
அதிக வேகத்தில் வரக்கூடிய அம்மாதிரியான சூரிய வளிமண்டல புயல்கள், செயற்கைக்கோள் மற்றும் தானியங்கி விமானங்கள் மீது மோதி பேரழிவை ஏற்படுத்தும் மின் தடைகளை ஏற்படுத்தி, மீண்டும் நம்மை கற்காலத்திற்கும் எடுத்துச் செல்லக்கூடிய ஆபத்து உண்டு.
சூரிய வளிமண்டல புயல்கள்
சூரிய வளியில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த காந்த ஆற்றலின் திடீர் வெளிப்பாடு பிரகாசமான ஒளியை ஏற்படுத்தும்
இது விண்வெளியில் மின்னூட்ட துகள்களை அதிக அளவில் வெளியிடும்.
இந்த சீரிய "எரிமலை வெடிப்புகள்" ஒளி பெரும் வெளியேற்றம் என்று அழைக்கப்படும்.
மின்னூட்டப்பட்ட வாயு, பூமியை சுற்றியுள்ள காந்த திரையுடன் மோதும்
அதனால் பூமியின் காந்த அடுக்கில் ஏற்படும் பதற்றம் சூரிய புயல் என்று அழைக்கப்படும்.
செயற்கைக்கோள், மின்னனு கட்டங்கள், மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் ஆகிய தொழிநுட்பங்களை கொண்டு ஆராயலாம்.
கீழ் நிலையில் பல வண்ண ஒலிக் கதிர்களை உருவாக்கக் கூடும்
இம்மாதிரியான சூரிய புயல் 1859 -ஆம் ஆண்டு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது. அது, தந்தி இணைப்பு தகவல் தொடர்பை கடுமையாக பாதித்தது.
குறைந்த விலை தொலைநோக்கி
உதகையில் இருக்கும் உலகின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான காஸ்மிக் கதிர் தொலைநோக்கி, நான்கு தசாப்தங்களுக்கும் பழமையான மறு சுழற்சி செய்யப்பட்ட, துத்த நாகம் பூசப்பட்ட எஃகு குழாய்களால் ஆனது.
"தேவைதான் கண்டுபிடிப்புகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது; நம்மால் புதிய விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடியவில்லை என்றால், இருக்கும் வசதிகளை கொண்டு தேவைகளை பூர்த்தி செய்து செலவுகளை குறைக்கிறோம்.
இந்தியாவின் விஞ்ஞானிகள், அதிக செலவுகள் இல்லாத தீர்வுகளை உருவாக்குவதிலும் மறுசுழற்சி கலையிலும் கைதேர்ந்தவர்கள்"; என்று தெரிவித்தார் அறிவியல் பத்திரிக்கையின் இந்திய செய்தியாளர் பல்லவ பாக்லா
இதற்கு சரியான எடுத்துக்காட்டு, 2014 ஆம் ஆண்டு இந்தியா செவ்வாய்கிரகத்தை அடைந்த கதை. அதற்கான செலவு 4.5 பில்லியன் ரூபாய் ஆகும்; இது அமெரிக்காவின் செவ்வாய்கிரகத்தை ஆராய்ச்சிக்கு அனுப்பப்பட்ட மேவென்னை விட 10 மடங்கு குறைந்த தொகையாகும். உதகை ஆய்வகத்தின் ஆண்டு பட்ஜெட் சுமார் 375,000 டாலர்கள் ஆகும்.



உலகின் ஆழமான சுரங்கமாக கருதப்படும், நூற்றாண்டு பழமையான கர்நாடக மாநிலம் கோலார் தங்கச் சுரங்கத்தின் குகைகளின் அடியில் கண்டுப்பிடிக்கப்பட்ட சுமார் இரண்டு தசாப்தங்களான அந்த 6 மீட்டர் நீண்ட குழாய்கள் தொலைநோக்கியின் சென்சார்களாக செயல்பட்டன.
நட்சத்திர மண்டலம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளில் ஏற்படும் அதீத ஆற்றல் உராய்வுகளால் உருவாகும் இணை அணு துகள்களான நியூட்ரினோக்களை ஆராயும் இந்திய மற்றும் ஜப்பானிய குழுவிற்கு உதவும் விதத்தில்,பொதுவாக கட்டட கட்டுமானங்களில் பயன்படுத்தப்படும் அந்த குழாய்கள் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.
அதனை பூமிக்கு கீழே 2 கி.மீட்டர் ஆழத்தில் விஞ்ஞானிகள் புதைத்துள்ளனர்.
அதீத உணர்வுதிறன்
1990களின் ஆரம்ப காலத்தில் தங்க விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்ததையடுத்து சுரங்கத்தை மூடத் தொடங்கினர், அதனையடுத்து அதிகாரிகள் குழாய்களை அகற்றி அதனை குப்பைகளாக அப்புறப்படுத்த திட்டமிட்டனர். "நாங்கள் எங்கள் சோதனைகளுக்கு அதை மறு உபயோகப் படுத்த விரும்புகிறோம்" என தெரிவித்ததாக இந்த ஆய்வை முன்னடத்தும் விஞ்ஞானிகளில் ஒருவரான குப்தா தெரிவித்தார்.
வானொலி வானியல் மையத்துடன் பகிர்ந்து கொண்டுள்ள அந்த மலைப்புற 100 ஏக்கர் இடத்தில் அமைந்திருக்கும் ஆய்வகத்திற்கு, டிரக் மூலம் 7,500 குழாய்களும் கொண்டு செல்லப்பட்டன.
அந்த மலைப்புறப் பகுதி, மான்கள், புலிகள் மற்றும் காட்டு பன்றிகள் சூழ்ந்த ஒரு காடாக அமைந்துள்ளது.
சமீபத்தில் சிசிடிவி கேமிராக்களில் சென்சார்களை கடந்து புலிகள் நடமாடுவது பதிவாகியுள்ளது.




உயர் ஆற்றல் காஸ்மிக் கதிர்களை பற்றி ஆய்வு செய்ய, அப்புறப்படுத்தப்பட்ட குழாய்களை கொண்டு விஞ்ஞானிகள் முயான் சென்சார்களை உருவாக்கியதை அடுத்து உதகையில் காஸ்மிக் கதிர்களை பதிவு செய்தல் 1998ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கியது;
உலகின் மிகப்பெரிய முயான் தொலைநோக்கியை கொண்ட உதகை ஆய்வகத்தில் இன்று 3,712 எஃகு குழாய்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன; அம்மாதிரியான தொலைநோக்கிகள் டஜன் கணக்காக உள்ளன ஆனால் உதகையில் உள்ளதை போன்று சக்திவாய்ந்ததாக இல்லை.
அந்த ஆய்வகத்தில் ஒரு சிறிய விஞ்ஞானிகள் குழு அவர்களுக்கான உதவியாளர்கள், தோட்டப் பராமரிப்பாளர்கள் மற்றும் தச்சர்கள் ஆகியோர் காஸ்மிக் கதிர் கண்டறியும் கருவியை உருவாக்க தொடர்ந்து பழைய குழாய்களை மறுசுழற்சி செய்து வருகின்றனர்.
சென்சார்களை உருவாக்குதல்
இதற்காக அந்த குழாய்களை திறந்து உயர் அழுத்த நீர் ஜெட்டுகள் கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. மேலும் அந்த குழாயில் நூறு மைக்ரான் அளவை கொண்ட, அதாவது மனித முடியின் அளவு கொண்ட டங்கஸ்டன் கம்பியை பொருத்துவார்கள்; மேலும் இரண்டு பக்கங்களிலும் நீர் புகாத அளவு அது சீல் வைக்கப்படும். அதனையடுத்து அந்த குழாய்கள், மீத்தேன் மற்றும் ஆர்கான் கலவையை கொண்ட வாயுவை வைத்து நிரப்பப்படும். மேலும் அதனை அதிக பயனுள்ள சென்சார்களாக மாற்ற மின்சாரம் பாய்ச்சப்படும்.
உறிஞ்சிகளாக செயல்படும் கான்கீரிட்டிற்கு கீழே, இரண்டு மீட்டர் ஆழத்தில் அவைகள் புதைக்கப்படுகின்றன முயான் தொலைநோக்கியாக உருவாக மலிந்த விலை பொருட்களை கொண்டு பிரச்சனைகளுக்கு புத்திசாலித்தனமான தீர்வை காண்பது என்பதற்கு எடுத்துக்காட்டாக அந்த குழாய்கள் சென்சார்களாக பயன்படுத்தப்படும்.


அந்த பழைய குழாய்கள் கசியவில்லை என்பதை ஆய்வகத்தில் உள்ள விஞ்ஞானிகள் உறுதி செய்ய, ஹீலியம் செலுத்தும் கருவியில், வாயு ஜெட்டின் முனையில் 7 செண்ட் ஊசியை பொருத்தி சிறிய கசிவு சோதனையை நடத்துவதற்கான கருவியாக பயன்படுத்துவர்.
"ஒவ்வொரு நாளும் அம்மாதிரியான 10 மறுசுழற்சி குழாய்களை எங்கள் சோதனைக்காக நாங்கள் தயார் செய்கிறோம்.
வலிமையற்ற குறிகளையும் சோதிக்கும் திறன் கொண்ட சக்திவாய்ந்த சென்சார்களையும் உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.
இதுவரை இல்லாத அளவு அதிக உணர்திறன் கொண்ட காஸ்மிக் கதிர்களை நாங்கள் அளக்க வேண்டும்" என்று அங்குள்ள விஞ்ஞானிகளில் ஒருவரான அடுல் ஜெயின் தெரிவித்தார்.
உள்நாட்டு தயாரிப்பு
அந்த ஆய்வகம் சொந்த மண்ணின் கண்டுபிடிப்பிற்கு ஒரு சிறந்த உதாரணம்.அங்குள்ள பல மின்னணு உபகரணங்கள் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டவை. மேலும் கணிணிகளுக்கான மென்பொருள் உள்ளூரில் தயார் செய்யப்படுகிறது.
தினந்தோறும் காஸ்மிக் கதிர்களால் உருவாக்கப்படும் 40 கிகா பைட் அளவு தகவல், அங்கு உருவாக்கப்பட்ட பல கணிணிகளில் சேகரித்து வைக்கப்பட்டு முறைப்படுத்தப்படுகிறது. இதனால் மிகப்பெரிய அளவிலான பராமரிப்பு கட்டணங்களும் மிச்சப்படுத்தப்படுகின்றன. பழைய கணிணிகளிலிருந்து பாகங்கள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மின்விசிறிகளை கொண்டு அங்கு தயாரிக்கப்பட்ட குளிரூட்டும் சாதனம் மின்சாரத்தை சிக்கனப்படுத்தி கணிணிகளை பாதுகாக்கின்றன. 

தற்போது விஞ்ஞானிகள், 17 ஆண்டுகளாக ஆய்வக சென்சார்களில் பதியப்பட்ட காஸ்மிக் கதிர்களைப் பற்றிய தகவல்களைக் கொண்டு, விண்வெளி வானிலை கணிப்புகள் மற்றும் சூரிய வளி மண்டல் புயல் குறித்த முன்னெடுக்கப்பட்ட எச்சரிக்கை ஆகியவற்றை கண்டறிய இயலுமா என்பதை ஆராயவுள்ளனர்.
17 வருட காலத்தில் 38 கடுமையான சூரிய வளிமண்டல புயல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
"மேலும் தெரிந்து கொள்ள கிடைத்த தகவல்களை பிரித்துப் பார்க்க வேண்டும். அது சூரியனில் இருந்து எங்களுக்கு வழங்கப்பட்ட பரிசாகும். ஏனென்றால் அதனைக் கொண்டு விண்வெளி வானிலை தகவலை பற்றி அறிந்து கொள்ள முடியும்" என்கிறார், விஞ்ஞானி குப்தா.  (http://www.bbc.com/tamil/science-39158720)