Pages

Wednesday, June 1, 2011

சந்திரனில் அதிக அளவில் சுத்தமான நீர்; விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

பூமியின் துணைக்கிரகமான சந்திரனில் நிறைய கனிம வளம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தண்ணீர் வளம் உள்ளதா என்பது பல தடவை ஆராய்ச்சிகள் செய்யப்பட்ட பிறகும் உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது. சந்திரனை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திராயன் மிகத்திறமையாக ஆய்வு செய்து சந்திரனில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது. அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் இதை உறுதி செய்து உள்ளனர்.

இதையடுத்து சந்திரனில் என்ன என்ன வளங்கள் உள்ளன என்பதை கண்டுபிடிக்க நாடுகளிடம் ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக அமெரிக்கா, சீனா, ரஷியா, இந்தியா ஆகிய நாடுகள் இடையே கடும்போட்டி நிலவுகிறது. இதற்கிடையே சந்திரனிலும் நாம் எதிர்பார்த்ததை விட அதிக தண்ணீர் வளம் இருப்பதாக அமெரிக்காவில் உள்ள கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் யுனிவர்சிட்டி, கர்ஜினி அறிவியல் கழகம், பிரவுன் யுனிவர்சிட்டி விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இதுவரை கணிக்கப்பட்ட அளவை விட 100 மடங்கு அதிக சுத்தமான தண்ணீர் நிலவில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். இது விஞ்ஞானிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment