சீனாவில்
திங்கட்கிழமை அன்று உள்நாட்டு பெய்டோ
குளோபல் நேவிகேஷனுக்காகவும் மற்றும் நெட்வொர்கை சரியாக
பொருத்துவதற்காகவும் ஒரு புதிய தலைமுறை
செயற்கைக்கோளை விண்வெளிக்கு ஏவியது. தென் மேற்கு
சீன மாகாணத்தில், சிச்சுவான் என்ற இடத்தில் உள்ள
க்ஷிசங் செயற்க்கைக்கோள் வழி மையத்தில் இருந்து
இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டது. Long March-3C கேரியர் ராக்கெட் மூலம்
உயர்த்தப்படுகிற இந்த செயற்கைக்கோளை, சீனாவின்
வான்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கார்ப்பரேஷனால்
உருவாக்கப்பட்டது என்று அரசு நடத்தும்
சின்குவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது பெய்டோ நேவிகேஷன் செயற்கைக்கோள்
அமைப்பு (BeiDou
Navigation Satellite System - BDS) இன்
17வது செயற்கைக்கோள் ஆகும். இந்த ஏவுதல்
மண்டலத்தில் இருந்து உலகளாவிய கவரேஜ்க்கு
பிடிஎஸ்-ஐ விரிவாக்கம் செய்கின்ற
ஆரம்பத்தை குறிக்கிறது.
இந்த சமீபத்திய செயற்கைக்கோள் புதிய வகையான நேவிகேஷன்
சிக்னல்களை மற்றும் செயற்கைக்கோள்களுக்கு இடையேயான இணைப்புகளை
சோதனை செய்து உலகளாவிய நெட்வொர்க்
உருவாக்க ஒரு அடித்தளத்தை வழங்குகிறது
என்று அறிக்கையில் தெரியவந்துள்ளது. ஒரு தன்னிச்சையான விமானத்தில்
கேரியர் ராக்கெட்டில் நிறுவப்பட்டு, நடுத்தரத்தில் இருந்து உயர் சுற்றுவட்டப்பாதை
வரை கோள்களை ஏவ ஒரு தொழில்நுட்பத்தை
சீனா பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்
No comments:
Post a Comment