Pages

Friday, July 15, 2011

வெகு விரைவில் இந்தப் பூமி அழிவைச் சந்தித்துவிடும் என்று சில புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.

நாம் வாழுகின்ற இந்தப் பூமி ஒரு பாரிய அழிவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது என்று சில விண்வெளி ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.
பூமியின் கடைசிக் காலம் நெருங்கிக்கொண்டிருக்கின்றது என்று, கிறிஸ்தவ ஆராய்ச்சியாளர்கள் பைபிளை ஆதாரமாகக் கொண்டு தீர்க்கதரிசனம் உரைத்து
வருகின்றார்கள்.

பூமி அழிகின்றதோ இல்லையோ ஆனால் ஒரு பெரிய ஆபத்தை அண்மைக்காலங்களில் சந்திக்கப்போவது உறுதி என்று ஒரு சில விஞ்ஞாணிகள் கருத்து வெளியிட்டு வருகின்றார்கள்.

நாம் வாழுகின்ற இந்தப் பூமி அழியப் போகின்றதா? நாம் அளவுக்கு அதிகமாக நேசிக்கின்ற, நாம் நீண்ட காலம் வாழத் துடிக்கின்ற, நாம் எமக்கானதாக மாற்றிக்கொள்ள விரும்புகின்ற, எமது சந்ததிகள், பரம்பரைகள் வாழவேண்டும், ஆழவேண்டும் என்று நாம் விரும்புகின்ற இந்தப் பூமி அழிந்துவிடப்போகின்றதா?

நாம் வாழுகின்ற இந்தப் பூமியை ஒரு ஆபத்து நெருங்கின்றதா? இந்தப் பூமி அழிந்துவிடப்; போகின்றதா? எப்படியான அழிவை இந்தப் பூமி எதிர்கொள்ளுகின்றது?

மனிதர்களால், அவர்கள் கண்டுபிடித்த விஞ்ஞாணத்தால் இந்த அழிவைத் தடுத்து நிறுத்த முடியுமா? இன்று பூமியிலுள்ள பலரிடம் இருக்கின்ற மிகப் பொரிய கேள்விக்கான விடையினைத் தேட முனைகின்றது உண்மையின் தரிசணம்.

No comments:

Post a Comment