Saturday, August 27, 2011
நட்சத்திரத்தை விழுங்கும் கறுப்பு ஓட்டை
Thursday, August 25, 2011
2013ம் ஆண்டு முதல் வான்வெளியில் இருந்து பூமியின் அழகை ரசிக்கலாம்
2013ஆம் ஆண்டு முதல் ஆகாயத்தில் பறந்தபடி பூமியையும், தினமும் உதிக்கும் சூரியனின் அழகையும் பார்த்து ரசிக்க முடியும்.
பூமிக்கு மேல் தொங்கி கொண்டு உலக காட்சிகளை பார்ப்பது என்பது நம்மை சிலிர்க்க வைக்கும் சாகசமாக இருக்கும். இந்த வித்தியாசமான பயணத்திற்கு ஆகும் செலவு 5 மணி நேரத்திற்கு 90 ஆயிரம் பவுண்ட் என கணக்கிடப்பட்டுள்ளது.
பூமியின் கடைசி வளைவு பகுதியை ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன் கலத்தில் இருந்து பார்த்து ரசிக்கலாம். இப்படி பயணம் செய்பவர்கள் சூரிய உதயத்தை பார்க்கும் முதல் மனிதர்களாகவும் இருப்பார்கள்.
பூமிக்கு மேல் 22 மைல் பயணம் செய்பவர்கள் செல்லும் கலம் 2 பைலட்டுகள் மற்றும் 4 பயணிகள் அமரும் வகையில் உள்ளது. இந்த கலத்துடன் 423 அடி விட்டம் கொண்ட ஹீலியம் பலூனும் இணைக்கப்பட்டு இருக்கும்.
ஹீலியம் காற்று ஒரு பொருளை உயரத்தில் கொண்டு செல்லக்கூடிய தன்மை படைத்தது ஆகும். இந்த கலத்திற்கு ப்ளூன் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த கலம் விண்வெளி பகுதியை அடைய ஒரு மணி நேரம் ஆகும்.
அதன் பின்னர் 3 மணி நேரம் பூமிக்கு மேல் பயணம் செய்த பின்னர் மீண்டும் அது திரும்பும். இந்த ஹீலியம் கலத்தை ஸ்பெயின் தொழிலதிபர் ஜோஸ் மரியானோ லோபஸ் உருவாக்கி உள்ளார்.
மனித உடலை விட குளிர்ச்சியான நட்சத்திரங்கள் கண்டுபிடிப்பு
நாசாவின் நீண்ட தூர அகச்சிவப்பு ஆய்வு கண்டுபிடிப்பு விவரங்களை பயன்படுத்தி விஞ்ஞானிகள் குளிர்ச்சியான நிழல் நட்சத்திரங்களை கண்டுபிடித்து உள்ளனர்.
இந்த நட்சத்திரங்கள் மனித உடலை விட குளிர்ச்சித் தன்மை பொருந்தியதாக உள்ளன. விண்வெளி ஆய்வாளர்கள் இந்த நட்சத்திரங்களுக்கு ஒய் ட்வார்ப் என பெயர் சூட்டியுள்ளனர்.
கண்ணுக்கு தெரியக் கூடிய வெளிச்சத்தில் பார்க்கக்கூடிய தொலைநோக்கியை பயன்படுத்தி பார்த்த போது மங்கிய வெளிச்சத்தில் இருந்த 6 ஒய் ட்வார்ப் நட்சத்திரங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
இந்த நட்சத்திரங்கள் நமது சூரியனுக்கு அருகாமையில் 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளன. இந்த சிறிய நட்சத்திரங்கள் மற்றும் இதரப் பொருட்களுக்காக வைஸ் விவரங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன.
அடர்த்தியான அகச்சிவப்பு கதிர் காரணமாக அவை மிக மங்கிய வெளிச்சத்துடன் காணப்பட்டன. பழுப்பு நிற சிறிய குடும்ப நட்சத்திர வரிசையில் ஒய் நட்சத்திரங்கள் மிக குளிர்ச்சியானவை. இதனை தவறிய நட்சத்திரங்கள் என கூறுவது உண்டு. இந்த ஆய்வு அறிக்கை கிர்க் பாட்ரிக் ஆய்வாளர் தலைமையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கு புதிய ஆதாரம் : நாசா
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கு புதிய ஆதாரம் : நாசா.
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகளை 10 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா கண்டுபிடித்தது.
செவ்வாய் கிரகத்தை படம் பிடித்து அனுப்புவதற்காக, ஒரு செயற்கைக்கோளையும் நாசா அனுப்பி வைத்துள்ளது. அந்த செயற்கைக்கோள் அனுப்பிய படங்களை ஆய்வு செய்த நாசா விஞ்ஞானிகளுக்கு, செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான புதிய ஆதாரம் கிடைத்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் வெப்பமான காலநிலை உள்ள மாதங்களிலும் தண்ணீர் இருப்பதை அந்த ஆதாரம் உணர்த்துவதாக நாசா விஞ்ஞானி பிலிப் கிறிஸ்டன்சன் தெரிவித்துள்ளார். அங்குள்ள தண்ணீர், உவர்ப்பாகவும், நிலப்பரப்புக்கு அடியிலும் இருக்கக்கூடும் என்று அவர் கூறினார்.
Wednesday, August 24, 2011
சூரியனில் ஏற்படும் தீப்பிழம்புகளால் ஆபத்து: நாசா விண்வெளி ஆய்வு
Monday, August 22, 2011
கண்ணுக்கு புலப்படாத மாசுகளை அகற்றும் செய்மதி
பூமியை நோக்கி வரும் விண்கல்லை அழிக்க நாசா திட்டம்
விண்வெளிக் கப்பலில் பணிசெய்த பாரத வீராங்கனை கல்பனா செளலா
விண்வெளித் தீர மாது கல்பனாவின் மின்னல் போன்ற வாழ்வு!
2002 ஆம் ஆண்டு மே மாதம், ‘பெண் விண்வெளி வீராங்கனைகள் ‘ என்னும் புத்தகத்துக்குக் கல்பனா செளலாவை நேர்முக வினாக்கள்
கேட்ட கனடாவின் எழுத்தாளி, லாரா உட்மன்ஸீ [Laura Woodmansee] கூறியது: ‘கல்பனா விண்வெளித் தேர்வில் வேட்கை மிகுந்தவராகத் தோன்றினார்! துடிப்பாக வாலிபம் பொங்கி இனிப்புக் கடைமுன் நோக்கும் மதலை போல் ஆர்வத்துடன் நடமாடினார்! தான் செய்யும் வேலைகளில் பெரும் இறுமாப்புக் கொண்டு, பங்கு கொள்ளப் போகும் கொலம்பியா பயணப் பணியில் முற்றிலும் ஊறிப் போய், உள்ளொளி வீசக் காணப்
பட்டார்! மெய்யாகவே அவர் எதிர்கால விண்வெளிக் கனவுகளில் மிதந்தார்! சந்திர மண்டலத்தில் ஆராய்ச்சிகள் செய்ய ‘விஞ்ஞான அரங்கு ‘ [Scientific Base] ஒன்றை நிறுவிப் பணி புரியத் தான் விரும்புவதாகக் கூறினார்! ‘ இவ்வாறு மேதை போல் பேசி, மங்கிடப் போகும் மாபெரும் ஓர் அறிவுச் சுடர் மகத்தான ஒளி வீசித் திடீரென மின்னல் போல் மறைந்தது!
Sunday, August 21, 2011
செயற்கைக்கோள் சுற்றுப்பாதை - ஒரு அறிவியல் அலசல்
விண்வெளியின் புதிர்கள்
Thursday, August 18, 2011
விண்வெளியில் தங்கி இனி விடுமுறையைக் கழிக்க முடியும்.
இதில் நான்கு அறைகளில் 7 விருந்தினர் தங்கலாம். இவற்றின் சுவர்கள் விண்வெளியையும் கீழேயுள்ள பூமியையும் பார்க்கக்கூடியவாறு கண்ணாடியினால் ஆக்கப்பட்டுள்ளன. இதற்குச் செல்ல Soyuz றொக்கற்றில் 2 நாட்களைக் கழிக்கவேண்டியிருக்கும்.
ஆனால் இது பணத்திற்
கேற்ப செலவினைக் குறைக்கும் விடுமுறையல்ல. 5 நாள் தங்குவதற்கு 100,000 பவுண்களும் பயணத்திற்கு மொத்தமாக 50
0,000 பவுண்களும் செலவாகும்.
இந்த வர்த்தக விண்வெளி விடுதி 2016 இல் திறக்கப்படவுள்ளது. இது சர்வதேச விண்வெளி நிலையத்தின் விண்வெளி வீரர்களால் பயன்படுத்தப்படும் கலத்தைவிட இன்னும் வசதியானதாகும். விண்வெளியில் நிறையற்ற நிலை காணப்படுவதால் இவர்களது படுக்கைகள் செங்குத்தாகவோ கிடையாகவோ காணப்படும்.
அத்துடன் நீரை இங்கு பயன்படுத்த முடியாதென்பதால் குளிக்க முடியாது. அனுபவமிக்க விண்வெளி விமானிகளுடன் செல்லும் சுற்றுலாப் பயணிகள் பூமியில் தயாரிக்கப்பட்ட உணவையே சூடாக்கி உண்பர்.
வழமையாக விண்வெளி வீரர்களுக்குக் கொடுக்கப்படும் குழாய்களில் அடைக்கப்பட்ட, உலர்ந்த உணவுகளைக் கொடுக்காமல் காளான்கள், கடலைகள், உருளைக்கிழங்கு சூப் மற்றும் பிளம்ஸ்கள் என்பன பயணிகளுக்கு வழங்கப்படும்.
தேநீர், சுத்திகரிக்கப்பட்ட நீர், பழச்சாறுகள் அனைத்தும் கொடுக்கப்படும். ஆனால் குடிவகைகள் தடைசெய்யப்பட்டுள்ளன. மலசலகூடங்களில் நீருக்குப் பதிலாக வாயு பயன்படுத்தப்படும். கழிவுநீரும் சுத்திகரிக்கப்படும்.
அதேவேளை அறைக்குள் உள்ள காற்றும் மீளச் சுத்திகரிக்கப்பட்டுத் திரும்பவும் அறைக்குள் அனுப்பப்படும். புவிச்சுற்றுப்பாதைத் தொழில்நுட்ப நிறுவனமே இவ்விடுதியைக் கட்டப்போகின்றது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏதாவது நெருக்கடி வந்தால் அங்கிருந்து பூமிக்குச் செல்லாமல் இந்த விடுதியையே விண்வெளிக்கூடமாகவும் பயன்படுத்தப்படக்கூடிய வசதி இதில் காணப்படும்.
Wednesday, August 17, 2011
செய்மதி மூலம் விண்வெளிக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை
பூமியைச் சுற்றிலும் உள்ள விண்வெளிக் கழிவுகளை அகற்ற செய்மதி ஒன்றினை ஏவுவதற்கு விஞ்ஞானிகள் தீர்மானித்துள்ளனர்.
இத்திட்டம் இத்தாலிய விண்வெளி நிறுவனத்தின் ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டது. இவ்வாறு அனுப்பப்படும் கலத்தின் முன்பக்கத்தில் எரித்து அழிக்கும் ஒரு றொக்கற் தொகுதி காணப்படும்.
இது பூமியின் சூழலிலுள்ள பாரிய குப்பைகளை அழித்து, சர்வதேச விண்வெளி நிலையத்தினை அல்லது தொடர்பாடல் செய்மதிகளைத் தாக்குவதிலிருந்து காப்பாற்றும்.
53 வருடங்களிற்கு முன்னர் ஸ்பூட்னிக் ஐ ஏவப்பட்டதிலிருந்து மனித இனம் ஏராளமான குப்பைகளை விண்வெளியில் விட்டுவந்துள்ளது.
கைவிடப்பட்ட றொக்கற்றுகள், செய்மதிகள் மற்றும் ஏவுகணைத் துண்டுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கிட்டத்தட்ட 370,000 துண்டுகளை உருவாக்கியிருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
மோதுகையினால் அல்லது கைவிடப்பட்ட விண்வெளிக்கலங்களின் துண்டுகள் சேர்ந்த 20,000 குப்பைகள் பூமியின் தாழ்சுற்றுவட்டப் பகுதியில் தற்போது காணப்படுவதாகக் கூறப்படுகின்றது.
இவற்றைச் சுத்தப்படுத்துவதற்கு இதுதான் சரியான நேரம். இனிமேலும் தாமதித்தால் இன்னும் இன்னும் அதிக குப்பைகளை அகற்றும் வேலைதான் அதிகரிக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
ஒவ்வொரு வருடமும் 5-10 பொருட்களையே இதனால் அகற்றமுடியுமெனத் தெரியவருகின்றது.
‘கெஸ்லர் சின்ட்றோம்’ எனும் குப்பைகள் உள்ள பகுதியையும் இச்செயற்பாடு அகற்றும்.
இத்திட்டம்பற்றி 30 வருடங்களுக்கு முன்னதாகவே நாசாவால் கருத்துக் கூறப்பட்டு வந்தது. இதனை விரைவாகத் தீர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதற்கும் தூண்டிவருகின்றது.
2009 இல் இரிடியம் 33 செய்மதிக்கும் கொஸ்மோஸ் 2251 செய்மதிக்குமிடையில் மோசமான விபத்து ஒன்று இடம்பெற்றது.
இவை பூமியின் சுற்றுவட்டத்தில் விநாடிக்கு 3,000மீ. இற்கும் மேல் சென்ற தொலைத்தொடர்பு செய்மதிகள் இரண்டிற்கிடையில் இடம்பெற்ற முதலாவது பாரிய விபத்தாக இருந்தது.
பாகிஸ்தானுக்காக செய்மதி ஏவும் சீனா
பாகிஸ்தானின் விண்வெளித்துறைக்கு உதவும் வகையில் சீனா பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சீனா - பாகிஸ்தான் இடையே இரு தரப்பு
பரஸ்பரம் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இவற்றை மேற்கொள்ளும் சீனா, முதன்முறையாக பாகிஸ்தானுக்காக தொலை தொடர்பு செயற்கை கோள் ஒன்றினை தயாரித்து விண்வெளிக்கு ஏவவிருக்கிறது.
PAKSAT-1 ஆர் என பெயரிடப்பட்டுள்ள குறித்த தொலை தொடர்பு செயற்கை கோள், 3பி டிரான்ஸ்பான்டர்கள் கொண்ட ராக்கெட்டை கொண்டுசெல்லவுள்ளது. இந்த செயற்கை கோள் மூலம் காலநிலை மாற்றம், அழுத்த தொலை தொடர்புகள் என்பவற்றை அறிந்து கொள்ள முடியும். மேலும் இராணுவ சேவைக்காகவும் பயன்படுத்தக்கூடிய நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கை கோள் சீனாவின் தென்மேற்கு பகுதியில் ஜிசாங் செயற்கை கோள் ஏவு மையத்திலிருந்து விரைவில் விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது பாகிஸ்தான், சீனா நல்லுறவை வளர்த்தெடுப்பதற்கான நல்லதொரு அடையாளமாக இருக்கும் என சிச்சாங் செய்மதி ஏவும் மையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Tuesday, August 16, 2011
1947ல் வேற்றுகிரக வாசிகள் பூமிக்கு வந்ததாக FBI தகவல்
கருப்பு நிறத்தில் ட்ரெஸ்-2 பி என்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு
Monday, August 15, 2011
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றார், சுற்றுலா பயணி: வானவெளி வீரர்கள் கட்டிப்பிடித்து வரவேற்றனர்
ரஷியாவின் சோயுஸ் விண்கலம், நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு விண்வெளியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்தது. அதில் இருந்த விண்வெளி சுற்றுலாபயணி சார்லஸ் சிமோனியும், 2 ரஷிய விண்வெளி வீரர்களும் விண்வெளி நிலையத்தில் நுழைந்தனர். அவர்களை ஏற்கனவே அங்கு இருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர்கள் கட்டி அணைத்து வரவேற்றனர். ரஷியாவின் சோயுஸ் விண்கலம், கஜகஸ்தான் நாட்டில் உள்ள பைகானூர் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் அமெரிக்காவை சேர்ந்த கம்ப்ïட்டர் நிபுணர் சுற்றுலா பயணியாக விண்ணுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார். அவருடன் 2 ரஷிய விண்வெளி வீரர்கள் பியோடோர் ïர்சிக்கின், ஒலேக் கோடோவ் ஆகியோரும் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.
சோயுஸ் விண்கலம் 2 நாட்களுக்கு மேலாக பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு சென்றதும் அது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை அடைந்தது. நேற்று முன்தினம் இரவு 12.40 மணிக்கு அது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி கழகத்துடன் இணைந்தது.
கைதட்டி வரவேற்றனர்
அதன்பிறகு அவர்கள் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்குள் நுழைந்தனர். இதை தரைக்கட்டுப்பாடு நிலையத்தில் இருந்த அமெரிக்க-ரஷிய அதிகாரிகள் மற்றும் சிமோனியின் நண்பர் மார்தா ஸ்டுவர்ட் ஆகியோர் கைதட்டி வரவேற்றனர். மார்தா அவரை பார்த்து நீங்கள் இப்போது இந்த உலகத்தை விட்டு வெளியே போய்விட்டீர்கள் என்று கூறினார். மார்தா ஒரு பெண். வாழ்க்கைக்கலை குருவான அவரை சிமோனி திருமணம் செய்துகொள்வதாக இருந்தது.
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் மைக்கேல் லேபஸ் அலெக்ரியா, சுனிதா வில்லியம்ஸ், ரஷிய விண்வெளி வீரர் மிக்கையில் டைïரின் ஆகியோர் அவர்களை கட்டி அணைத்து வரவேற்றனர்.
20-ந் தேதி பூமிக்கு திரும்புகிறார்
சிமோனி வருகிற 20-ந் தேதி பூமிக்கு திரும்புகிறார். அவருடன் ரஷிய விண்வெளி வீரர் டைïரின், அமெரிக்க வீரர் லோபஸ் அலெக்ரியா ஆகியோரும் பூமிக்கு திரும்புகிறார்கள். இவர்கள் 2 பேரும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் தங்கி இருக்கிறார்கள்.
சிமோனியுடன் விண்வெளிக்கு பறந்த ரஷிய விண்வெளி வீரர்கள் ïர்சிக்கின், கோடோவ் ஆகியோர் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் 6 மாதம் தங்கி இருப்பார்கள். இந்த 2 பேருடன் சுனிதா வில்லியம்சும் தங்கி இருப்பார்.
Sunday, August 14, 2011
விண்வெளியில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு
இந்நிலையில் தற்போது ஒரு புதிய கிரகம் இருப்பதை கெப்ளர் விண்கலம் கண்டுபிடித்து புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. அது அளவில் பெரிய கிரகமான வியாழனை விட மிக பெரியதாக உள்ளது. அதற்கு "ட்ரெஸ்-2 பி" என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்னர்.
இது மஞ்சள் நிறத்திலான நட்சத்திரங்களின் இடையே பதுங்கி கிடக்கிறது. அதன் மீது சூரியனின் 1 சதவீத வெளிச்சம் மட்டுமே விழுகிறது. இதனால் இந்த கிரகம் கரியை விட மிகவும் கறுப்பு நிறத்தில் உள்ளது. இதன் மேற்பரப்பில் பல கியாஸ் பிரதிபலிக்கின்றன.
வியாழன் கிரகத்தில் சூரியனின் வெளிச்சம் அதிக அளவில் விழுகிறது. அதனால் வெள்ளை மற்றும் சிவப்பு நிற மேகங்கள் படர்ந்திருப்பது தெரிகிறது.
ஆனால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ட்ரெஸ் 2 பி கிரகத்தில் சூரிய கதிர்களின் வெளிச்சம் விழாததால் அதுபோன்ற மேக மூட்டங்கள் படர்ந்திருப்பதை காண முடியவில்லை என விண்வெளி ஆராய்ச்சியாளர் டேவிட் கிப்பிங் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் இந்த கிரகம் கடும் வெப்பமாக உள்ளது. இங்கு 1800 டிகிரி பாரன்கீட் வெப்பம் நிலவுகிறது. அதிலிருந்து வெளியாகும் வெப்ப கதிர்கள் மங்கலான சிவப்பு கதிர்களாக தெரிகிறது. ட்ரெஸ்- 2 பி கிரகம் குறித்து கெப்லர் விண்கலம் மூலம் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Saturday, August 13, 2011
செவ்வாய்க் கிரகத்தில் மகாத்மா காந்தி!
பெரிய காதுகள், அடர்ந்த மீசை, பொக்கை வாய்ச் சிரிப்பு ஆகியவற்றை கண்டு கொண்டார் என்று அடித்துக் கூறி உள்ளார். ஆம். செவ்வாயில் உள்ள மேடு ஒன்று மகாத்மா காந்தியின் அசல் முகத்தை பிரதிபலிக்கின்றது. செவ்வாயில் உள்ள மேடுகள் பலவும் மனித உருவங்களைப் போல் காட்சி அளிக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.