செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கு புதிய ஆதாரம் : நாசா.
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகளை 10 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா கண்டுபிடித்தது.
செவ்வாய் கிரகத்தை படம் பிடித்து அனுப்புவதற்காக, ஒரு செயற்கைக்கோளையும் நாசா அனுப்பி வைத்துள்ளது. அந்த செயற்கைக்கோள் அனுப்பிய படங்களை ஆய்வு செய்த நாசா விஞ்ஞானிகளுக்கு, செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான புதிய ஆதாரம் கிடைத்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் வெப்பமான காலநிலை உள்ள மாதங்களிலும் தண்ணீர் இருப்பதை அந்த ஆதாரம் உணர்த்துவதாக நாசா விஞ்ஞானி பிலிப் கிறிஸ்டன்சன் தெரிவித்துள்ளார். அங்குள்ள தண்ணீர், உவர்ப்பாகவும், நிலப்பரப்புக்கு அடியிலும் இருக்கக்கூடும் என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment